குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்து சுக்கரவார்பேட்டை பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார்

குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் சுக்கரவார்பேட்டை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட்டனர்.

கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை குடிக்க நேரிடும் சூழலால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, சுக்கரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதை எடுத்து வந்து, முறையாக குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சனையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...