அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர் நியமிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் பெருக்குபவர், துப்புரவுப் பணியாளர் மற்றும் இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அளித்திட மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிப்படி பதிவு செய்யப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த ஏஜென்சியினர் முத்திரையிடப்பட்ட உறையில் உரிய விண்ணப்பத்தினை முகமை அங்கீகார நகல், விலைப் புள்ளி விபரங்களுடன் "அடிப்படை பணி வெளிமுகமை ஒப்பந்ததாரர் நியமனத்திற்கான ஒப்பந்தப்புள்ளி" என்று உறையின் வெளிப்புறம் தெளிவாகக் குறிப்பிட்டு 28.6.2017-ஆம் அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும், மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளி விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் அறையில் வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட பெட்டியில் சேர்க்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...