அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வைத்துள்ளவர்கள் வரும் நவ. 3-க்குள் வரைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் பொருட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி 20.10.2016-க்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைபடுத்திக்கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரைமுறைபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வரைமுறைப்படுத்தும் கால அவகாசம் 03.11.2017 உடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் (www.tnlayoutreg.in)  இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...