மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டை இடித்து அதிகாரிகள் மீட்பு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்ப்பட்ட 34வது வார்டு வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 18 சென்ட் பூங்கா இடத்தை மனை பிரிவு உரிமையாளரே கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமித்து உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் இன்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் E2 காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை இடித்து அப்பகுதியை மீட்டனர். இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட் இடத்தை மீட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலரிடம் பேசுகையில்; மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தினை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த வாரம் வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் நடராஜன் என்பவர் 18 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் செட் அமைத்து அப்பகுதியில் மாடுகளை கட்டி தொழில் செய்து வந்தார். பின்னர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், நேற்று அதிகாரிகளால் அப்பகுதியை மீட்டனர். அதேபோல், மற்றொரு பகுதியில் வீடு ஒன்று கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தகவல் அறிந்து அதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 4 கோடி ரூபாய் மதிப்புடைய ரிசர்வ் சைட்  இடத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...