கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பரபரப்பு


மார்கசிஸ்ட் கட்சியின் டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஜீன் ஏழாம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் ஒருபகுதியாக கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அதிகம் இருக்கக்கூடிய பகுதியான துடியலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது இந்து முன்னனி மற்றும் இந்துத்துவா அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர். இதனையடுத்து, இன்று காலை 6 மணியளவில் மர்ம நபர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் காரின் மீது பெட்ரோல் கலந்த இரண்டு மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, கட்சியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் லஷ்மி, மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாராணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் கலந்த குண்டுகள் வீசியதில் உடைந்துபோன பாட்டில்களில் இருந்து கைரேகையை சேகரித்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு குற்றாவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...