ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(60). ஓய்வு பெற்ற சப்-கலெக்டரான இவர் கடந்த 14ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.  நிகழ்ச்சி முடிந்த பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படாததால் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஒரு கைரேகை கண்டெடுக்கப்பட்டது.  இந்த கைரேகையை பிற குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...