அங்கீகரிக்கப்படாத மனைகளை வரும் 03.11.2017-க்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் பொருட்டு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணை எண்.78, நாள். 04.05.2017– ல் தெரிவித்துள்ளபடி 20.10.2016 -க்கு முன்னர் பத்திரபதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் (அ) மனைகிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டுமென கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்களை உரிய ஆவணங்களுடன் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் வழியாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தல் அவசியமானதாகும். ஆகவே, அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்கள் 03.11.2017 தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேற்படி பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் மற்றும் மனையிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை/உள்ளுர் திட்டகுழுமத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தனிப்பட்ட மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பித்து மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனைகளை வரைமுறைப்படுத்தும் மேற்படி திட்டதின் கீழ் வரைமுறைப்படுத்திய மனைகளுக்கு மட்டுமே எதிர்காலங்களில் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை மாநகராட்சி மூலம் பெற்றுக் கொள்ள இயலும். மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாநகராட்சியில் 5 மண்டல அலுவலகங்களையும், பிரதான அலுவலகத்தையும் மற்றும் கோயம்புத்தூர் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்தையும் அணுகி விபரம் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...