செய்தியாளர்கள் தங்கள் சித்தாந்தத்தை வெளிப்படுத்த வேண்டாம்: பயிற்சிப்பட்டறையில் பத்திரிகையாளர் வேலுச்சாமி பேச்சு



கோவை பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7-வது பயிற்சிப்பட்டறை இன்று காலை கோவை பிரஸ் க்ளப் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், தினமலர் நாளிதழின் செய்தியாளர் ரா.வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அரசியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 



ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க எவ்வித பாதுகாப்பு சட்டமும் நம் நாட்டில் இல்லை. தற்போது, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன.

ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பதற்கு முன் பத்திரிகையாளர்கள் நாட்டு நடப்பு குறித்த புதிய செய்திகளை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் சில சங்கடமான சூழல்களை சந்திக்க நேரலாம்.



இன்றய காலகட்டத்தில் கேள்வி என்பது பதிலை பெறுவதற்காக கேட்கப்படுவதில்லை. மாறாக, ஒருவரை சிக்கலில் சிக்க வைப்பதற்காகவே கேட்கப்படுகிறது, இளம் பத்திரிகையாளர்கள் இந்த முறையை கைவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை முழுமையாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதனால் ஒரு கேள்வி கேட்டபின்னர், அதற்கான முழுமையான பதிலை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு பின்னரே அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். அனைவருமே ஏதாவது ஒரு சித்தாந்தத்தை சார்ந்தவர்களாக அல்லது ஆதரிப்பவர்களாக இருப்போம். நடுநிலையான பத்திரிகையாளராக பணிபுரிய வேண்டுமென்றால், நமது சித்தாந்தத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. அப்படி தெரிவித்தால், இருவித இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். ஒன்று, நமது சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் கொண்ட அரசியல் பிரமுகர்கள், நம்மிடம் நெருக்கமாக பழகமாட்டார்கள். அதனால் நம்மை நம்பி உள்ள விஷயங்களை தெரிவிக்காமல் தவிர்த்துவிடுவார்கள். இரண்டாவது இழப்பு, நாம் எதிர்சித்தாந்தம் கொண்டவரைப் பற்றி உண்மையான செய்தி எழுதினால் கூட, அதை நம் கொள்கையை காரணம் காட்டி உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அதனால் அனைத்து தரப்பினருடனும் நட்புடன் பழகி செய்திக்கான சோர்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியின் முடிவில் இளம் பத்திரிகையாளர்கள் சார்பில் மூத்த பத்திரிகையாளர் வேலுச்சாமிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...