புரவங்கரா, கோவையை ‘பசுமை கோயம்புத்தூர்’ ஆக மாற்றும் முயற்சியாக ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியை மேற்கொள்கிறது

புரவங்கரா, கோயம்புத்தூர் மாநகரை பசுமையான கோயம்புத்தூர் ஆக மாற்றும் முயற்சியாக, மாபெரும் ‘மரம் நடுதல்’ என்னும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது, செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ப்ராவிடெண்ட் க்ரீன் பார்க்கில் நடைப்பெற்றது. 



புரவங்கரா மேற்கொண்டிருக்கும் ‘மரம் நடுதல்’ முயற்சியானது, எழில் கொஞ்சும் கோவை நகரின் பழைய அழகையும், இயற்கை சுற்றுப்புறத்தையும் மீட்டெடுக்கும் நல்லெண்ணத்தின் ஒரு சிறிய வெளிப்பாடாகவும், முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு முதல்  மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், புரவங்கரா நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆபரேஷன்ஸ், வீரராகவன் கலந்து கொண்டார். ‘மரம் நடுதல்’ முயற்சியைக் குறிப்பிட்டு அவர் பேசுகையில், நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, நமது சுற்றுச்சூழலை  பாதுகாப்பதிலும், தொடர்ந்து நீடித்து இருக்கக்கூடிய இயற்கைச் சூழலையும் உருவாக்குவதிலும் புரவங்கரா மிகவும் அக்கறையுடனும், அதிக உத்வேகத்துடனும் செயல்பட்டுவருகிறது. அத்தகைய முயற்சியில், இந்த ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சி ஒரு சிறிய அங்கமாகும். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் சமூகத்திற்கு  வளமையையும், வளர்ச்சியையும் அளிக்கும் வகையில் புரவங்கரா தொடர்ந்து தனது பங்கினை நிச்சயம் வழங்கும். இங்கு வசிக்கும் மக்கள் இயற்கை சூழ்ந்த பசுமையான சூழலில் வாழ்வது சாத்தியப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அவர்களுடைய சுற்றுச்சூழலானது என்றென்றும் இயற்கையுடன் அமைவதில் நாங்கள் பங்கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.



ப்ராவிடெண்ட் பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் ப்ராவிடெண்ட் ஹவுஸிங்கின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில் ஒன்றாக கைக்கோர்த்ததன் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...