கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி துவக்கம்!

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த 18 வாரங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் இன்று 19-வது வாரமாக தமிழர்களின் நீர் மேலாண்மைக்கும் கட்டிட கலைக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஆழி கிணற்றை மீட்கும் களப்பணி மற்றும் பசுமையை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிணறு தூய்மை படுத்தும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். கலப்பணியின் போது 7 அடி ஆழமுள்ள மண் அகற்றப்பட்டது.



மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளதால் மழையளவு குறைந்துள்ளது. எனவே மழையளவை அதிகரித்து நீர் வளங்களை மீட்கும் வகையில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க களப்பணி முடிந்தவுடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 5000 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன.



இதனிடையே, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குளத்திற்கு கரை அமைக்கும் பணியில் இன்று நான்கு  ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணியானது செங்குளம் தன்னார்வலர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...