கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி துவக்கம்!

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த 18 வாரங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் இன்று 19-வது வாரமாக தமிழர்களின் நீர் மேலாண்மைக்கும் கட்டிட கலைக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஆழி கிணற்றை மீட்கும் களப்பணி மற்றும் பசுமையை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிணறு தூய்மை படுத்தும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். கலப்பணியின் போது 7 அடி ஆழமுள்ள மண் அகற்றப்பட்டது.



மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளதால் மழையளவு குறைந்துள்ளது. எனவே மழையளவை அதிகரித்து நீர் வளங்களை மீட்கும் வகையில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க களப்பணி முடிந்தவுடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 5000 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன.



இதனிடையே, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குளத்திற்கு கரை அமைக்கும் பணியில் இன்று நான்கு  ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணியானது செங்குளம் தன்னார்வலர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...