மண் சட்டிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி வண்டல் மண் சட்டிகளுடன் வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் "கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற நீர் நிலைகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் நிலைகளும் தூர்வாரப்படும்' என்றார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர் கையில் வண்டல் மண் சட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...