கோடை விடுமுறை முடிந்தும் கோத்தகிரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் கோடநாடு காட்சிமுனையில் பள்ளிகள் திறந்த பின்னரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோடநாடு காட்சி முனையினைக் காண நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருகின்றன.

இங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், தெங்குமராடாவின் வயல்வெளிகள், பவானியில் கலக்கும் மாயாரின் அழகு என கண்ணைக் கவரும் வகையில் இயற்கை காட்சிதரும்.

இதனிடையே, கோடநாடு காட்சிமுனைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வனத்துறையின் சார்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதனை மிறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வேலி அமைத்தும் அதைத் தாண்டி செல்வது ஆபத்தை விளைவிக்கும். எனவே வேலிகளை தாண்டி செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...