மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி

மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது.



இந்நிலையில், இம்மையத்தின் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.



பாஜக-வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும்  மேற்பட்ட பெண்கள் பூத்தொடுக்கும் போட்டியில் பங்கேற்றனர். பின்னர், கனரா வங்கி சார்பில் பெண்களுக்கான சிறு தொழில் கடனுதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெண்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணரும் விதமாக இன்று பூத்தொடுக்கும் போட்டி நடைபெறுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தும் விதமான இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் பெண்கள், தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுகின்றனர். போட்டியில் வெற்றி பெரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.



தொடர்ந்து, கனரா வங்கியின் சார்பில் பெண்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சிறு தொழில்முனையும் பெண்களை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...