சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை- கோவையில் முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிதி நிறுவனம் நடத்தி 3.65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு மேட்டூர் காவேரி பைனான்ஸ், அன்னை காவேரி பைனான்ஸ், ஸ்ரீ காவேரி பைனான்ஸ் என்ற  மூன்று நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. மேட்டூரை சேர்ந்த பார்த்திபன், சிவக்குமார், கனகராஜ் ஆகியோர் தங்களது உறவினர்களை இயக்குனர்களாக இணைத்துக்கொண்டு இந்த நிதிநிறுவனங்களை நடத்தி வந்தனர். 

இதனிடையே, கடந்த 2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிக வட்டி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டோரிடம் 3.65 கோடி ரூபாய் இந்த நிதி நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மணி என்பவர் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களின் மீதும், 24 இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 முதல் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே ரங்கசாமி என்ற இயக்குனர் உயிரிழத்தார். 

இந்நிலையில் திங்களன்று (ஜூன் 19) இந்த வழக்கில் முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதி பாபு தீர்ப்பு வழங்கினார். இதில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கும் தலா 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தார். மேலும், 23 இயக்குனர்களுக்கும், 3 நிதி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 44 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பினை வழங்கினார். மேலும், அபராதத் தொகையினை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கவும் தனது தீர்ப்பில் நீதிபதி பாபு உத்திரவிட்டார்.

இதனையடுத்து 23 நிதி நிறுவன இயக்குனர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 23 பேரில் பெரும்பாலான  இயக்குனர்கள் 60 வயதை கடந்த மூத்த குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீர்ப்பு, மோசடியில் ஈடுபடும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என அரசு வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...