கோவை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவம் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யபிரியா (19). இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் தலை சுற்றல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சத்யபிரியா-வை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது இருதயத்தில் சிறிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



முதன் முறையாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள புதிய அறுவைசிகிச்சை இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. 25 நிமிடம் இருதய துடிப்பை நிறுத்தி மேற்கொள்ளும் இந்த சிகிச்சை மிகவும் நுணுக்கமானது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது 2 முதல் 3 லட்சம் வரை பணம் செலவாகும். எனவே, இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இனி பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...