பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்

பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைப்பதற்காக கோவை மாவட்ட நிர்வாகம் இரு பகுதிகளை தேர்வு செய்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று இதுகுறித்து கூறுகையில், பவானி ஆற்றில் நீர்இணைப்பு பகுதியின் முக்கிய இடத்தில் இரு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு தற்காலிகமான மாசு கண்காணிப்பு அலக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

மேலும், இந்த திட்டப் பணிக்காக ஒரு கோடி ரூபாயினை ஒதுக்கி பணிகளை துவங்கவும், அன்றாடம் பவானியில் மாசு காரணிகள் குறித்து கண்காணிக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆலையின் அமைப்பானது மாசுபாட்டை கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க வடிகால் திட்டம் சுமார் ரூ. 97 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளின் துவக்கத்தில், பவானி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழில்நிறுவனங்களில் இருந்து நிதியை சேகரிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், தமிழக அரசே இந்த பணிகளுக்கான முழு செலவினையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது இன்று (செவ்வாயன்று) டெண்டர்கள் செயல்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பவானி அற்றில் மாசு கண்காணிப்பு அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் ஏ.அப்துல் ரசீத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...