நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்- ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்



நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும், இந்திய நீதித்துறையில் நான் தான் ஹீரோ எனவும் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தெரவித்தார்.

கோவையை அடுத்த ஈச்சனாரி அருகே மாச்சேகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் செவ்வாயன்று இரவு மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்துச் செல்ல கோவை விமான நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நீதித்துறையில் லஞ்சம் இருக்கனும் என உச்ச நீதி மன்றம் சொல்கிறது. லஞ்சம் கூடாது என நான் சொல்கிறேன். இது தான் தன் மீதான வழக்கு. காவல் துறையினர் சட்டப்படி செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த புகாரும், குறைபாடும் இல்லை. என்னுடைய போராட்டம் தொடரும். நான் குற்றவாளியல்ல. நீதித்துறையில் நான் ஹீரோ. தேசமக்களுக்காகவும் தேச நலனுக்காகவும் நான் போராடுகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 

நீதித்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 8 நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து இருக்கிறேன். அவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதித்ததை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.

தாழ்த்தப்பட்ட சமூக நீதபதியான தனது உத்தரவுகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை. உயர் வகுப்பு நீதிபதிகளின் உத்தரவுகள் மட்டும் அமல்படுத்தப்படுகின்றன. 

நீதித்துறையில் லஞ்சமும், சாதியமும் உள்ளது. நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.

முன்னதாக, பேட்டியின் போது காவல்துறையினர் சிலர் இடையூறு செய்த போது கோபமடைந்த நீதிபதி கர்ணன், நான் தீவிரவாதியல்ல எனவும் காவல் துறையினர் ஒதுங்கி நில்லுங்கள் எனவும் மக்களுக்கு செய்தியை சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து விமானம் மூலம் நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...