ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும்- ஈஷாவில் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் பேச்சு


உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

3 வது உலக யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ்சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யசாகர்ராவ் பேசுகையில், யோகா என்பது இந்தியா உலகிற்கு கொடுத்த பரிசு. மன அழுத்தம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது. அதனை நீக்க சிறந்த வழி யோகா. 

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும். யோகா மூலம் போதைக்கு அடிமையானவர்களை மீட்க முடியும். தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 40 பல்கலைக் கழகங்களில் யோகா கற்றுத் தர அறிவுறுத்தப்படும்" என்றார்.

இதற்கு முன்னதாக பேசிய ஜக்கி வாசுதேவ், பள்ளி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுத்தரப்படுத். நல்ல மனிதர்களை உருவாக்குவதன் மூலமே நல்ல நாட்டை உருவாக்க முடியும். யோகா மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...