மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டத்தினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகளை வாரம் ஒரு முறை புதன் கிழமை மட்டும் தவறாது வாங்கவும் மற்றும் மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளை வாங்கவும் அனைத்து மண்டல துப்புரவு அலுவலர்கள், அனைத்து துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல வார்டு பகுதிகளிலும் மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகள் மட்டும் வாங்கப்பட்டது. தடாகம் ரோடு மற்றும் டி.வி.எஸ் நகர் பகுதியில் வார்டு எண். 6, மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகள் மட்டும் வாங்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிழக்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 3.7 டன், மேற்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 8.4 டன், வடக்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 4.2 டன், தெற்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 7.9 டன், மத்திய மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 18.8 டன், ஆகமொத்தம் சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பைகள் 43 டன்.

இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தருவதற்கு வசதியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை வாரத்தில் ஆறு நாட்களுக்கும், மக்காத குப்பை புதன் கிழமைகளிலும் சேகரிக்கப்படும். இதன் மூலம் குப்பைகள் தரம் பிரித்தல், சேகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை அறிவியல் ரீதியாக நடத்தப்படும்.

ஆகவே, பொது மக்கள் அனைவரும் இப்புதிய திட்டத்திற்கு ஆதரவளித்து கோவை மாநகரை தூய்மையான மாநகராட்சியாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...