கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி கிடைந்தாகவும், சுகாதரமற்ற முறையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுபாஷ் சுந்தரம் என்ற இளைஞர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் சுபாஷ் சுந்தரம். இவர் இன்று பிற்பகல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிடுவதற்கு தயிர் சேமியா ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கொடுக்கபட்ட தயிர்சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் இது குறித்து நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.



மேலும், அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் கோவை பந்தய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், தயிர் சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்ததும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏற்கனவே இதே போன்று ஓரு முறை இந்த ஹோட்டலில் சாப்பிட வந்த போது சாப்பாட்டில் பூச்சி இருந்தாக கூறினார். தொடர்ச்சியாக சுகாதரமற்ற முறையில் உணவில் பூச்சிகள் இருப்பதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். கோவையில் இயங்கி வரும் இந்த பிரபல ஹோட்டலுக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...