பண மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகருக்கு ஜூலை 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்



கர்நாடக அரசின் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு வருகிற ஜூலை 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், கணபதி பகுதியில் சமையலறை சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் ராஜவேலு என்பவரிடம் கடந்த 21.12.2010 அன்று கர்நாடகாவிலிருந்து அழைப்பதாக பிரகாஷ் என்பவர் பேசியுள்ளார். அப்போது கர்நாடக அரசுக்கு சமையல் உபகரணம் வாங்க ஒப்பந்த புள்ளி கோர உள்ளதாகவும், அதற்காக முதல் படிவம் பெற வேண்டும் எனக் கூறி 43 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பின்னர் இரண்டாவது கொள்முதல் செய்வதற்கான படிவம் வாங்க 1.37 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்ற அவர், மேலும் 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் மீதத்தை திருப்பி செலுத்தி விடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அது மட்டுமின்றி வைப்பு தொகையாக ரூ.3.50 லட்சம் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு ஆன்லைன் மூலம் கர்நாடக அரசை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் பணம் பெற்றது போலியான நபர் என தெரிய வந்தது.

இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக சுகேஷின் தந்தை சந்திரசேகரும் இரண்டாவது குற்றவாளியாக சுகேஷும் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணைக்காக கடந்த 8-ம் தேதி சுகேஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரை 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அதிகாலை டெல்லியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை வருகிற ஜூலை மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கோவையிலிருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுகேஷ் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் டெல்லி அழைத்து செல்லபட இருக்கிறார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...