ஜிஎஸ்டி வரியை பூதம் என நினைத்து தொழில்துறையினர் பயப்படத் தேவையில்லை- நிர்மலா சீத்தாராமன்

ஜிஎஸ்டி வரியினை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை எனவும், ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நாட்டிற்கு பயனளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி வரி நடைமுறை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தொழில்துறையினை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி தொடர்பான தொழில் துறையினரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க அந்தந்த தொழில் வர்த்தக சபைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி கீழ்மட்ட ஊழலை ஒழிக்க சிறந்த திட்டம்.இத்திட்டத்தை எதிர்ப்பது நாட்டுக்கு நல்லத்தல்ல. ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் இரு மாதங்களுக்கு அதில் தொழில் துறையினர் தவறாக தகவல்கள் பதிவு செய்தாலும் அபராதம் வசூலிக்கப்படாது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது பாஜக அரசு மட்டும் கொண்டு வந்ததல்ல. இது அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டியை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நட்டிற்கு பயனளிக்கும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையினால் சுங்கச்சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் பாதியாக குறையும். ஜிஎஸ்டியினால் தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தவறான பிரச்சாரம்" என்றார். எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...