காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு பாஜக ஆதரவு கோரி வருகிறது.

வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பாஜக தலைவர்கள் ஆதரவு கோரினார்கள். மேலும் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்றும் பாஜக-வினர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...