கோவையில் எட்டு குளங்களை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் சுமார் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை முதல் கட்டத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, கோவையில் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் மட்டும் ஸ்மார்ட் சிட்டியின் தற்போதைய திட்டத்திற்கு ரூபாய் 1,570 கோடி வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வகுப்பது என்பது மிக முக்கியமான பணி, தொலைநோக்கு பார்வையுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகரம் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்குரிய திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயலாக்கத்திற்கு வருகின்றன.

கோவை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க பல்வேறு புதிய திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 8 குளங்களில் ஏரிகளை சுத்தப்படுத்தி புதுப்பித்தல், ஸ்மார்ட் ட்ரீ, ஸ்மார்ட் பள்ளி, திடக்கழிவு மேலாண்மை, மாதிரி சாலை, காற்று மாசுபாட்டு கருவிகள் அமைத்தல், சோலார் மின் விளக்கு வசதி, வ.உ.சி உயிரியல் பூங்கா மேம்படுத்துதல், நகர் கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் முழுவீச்சுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 

ரூ.500 கோடி மதிப்பில் குளங்கள் மேம்பாட்டுத் திட்டம்: கோவையில் உள்ள நரசாம்பதி, செல்வம்பதி, கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்கள் மேம்படுத்த இந்த குளங்களில் தற்போது கலக்கப்படும் கழிவு நீர்களை குளங்களில் கலக்காமல் தடுத்து, மாற்று வழிகளில் கழிவு நீர்களை விடவும், மேலும் குளங்களில் நீர்களை ஆய்வு செய்தும், குளங்களை தூர்வாரி புரணமைத்து பருவ மழைக் காலங்களில் நீர் தேக்கம் அதிக்கப்படுத்தவும், பூங்கா அமைத்தும், குளங்களில் நீரூற்று அமைத்தும் அழகுபடுத்தப்படும். 

மேலும், மேற்குறிப்பிட்ட 8 குளங்களையும் இணைக்கும் வகையில் சாலை அமைத்து அதில் மிதிவண்டிகள் மூலமாக பொதுமக்கள் பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தற்போது சர்வேயர் மூலம் நிலஅளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இன்னும் 10 மாதத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளங்கள் மேம்படுத்தப்படுவத்தினால் தற்போது இந்த குளங்களில் அருகில் வசித்து வரும் பொதுமக்களை வெள்ளலூர் பகுதிகளுக்கு மாற்ற மாநகராட்சி சார்பில் குடிசை மாற்று வாரியம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக ரூபாய் 233 கோடி அடுக்குமாடி குடியிருப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...