கோவையில் எட்டு குளங்களை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் சுமார் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை முதல் கட்டத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, கோவையில் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் மட்டும் ஸ்மார்ட் சிட்டியின் தற்போதைய திட்டத்திற்கு ரூபாய் 1,570 கோடி வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வகுப்பது என்பது மிக முக்கியமான பணி, தொலைநோக்கு பார்வையுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகரம் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்குரிய திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயலாக்கத்திற்கு வருகின்றன.

கோவை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க பல்வேறு புதிய திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 8 குளங்களில் ஏரிகளை சுத்தப்படுத்தி புதுப்பித்தல், ஸ்மார்ட் ட்ரீ, ஸ்மார்ட் பள்ளி, திடக்கழிவு மேலாண்மை, மாதிரி சாலை, காற்று மாசுபாட்டு கருவிகள் அமைத்தல், சோலார் மின் விளக்கு வசதி, வ.உ.சி உயிரியல் பூங்கா மேம்படுத்துதல், நகர் கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் முழுவீச்சுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 

ரூ.500 கோடி மதிப்பில் குளங்கள் மேம்பாட்டுத் திட்டம்: கோவையில் உள்ள நரசாம்பதி, செல்வம்பதி, கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்கள் மேம்படுத்த இந்த குளங்களில் தற்போது கலக்கப்படும் கழிவு நீர்களை குளங்களில் கலக்காமல் தடுத்து, மாற்று வழிகளில் கழிவு நீர்களை விடவும், மேலும் குளங்களில் நீர்களை ஆய்வு செய்தும், குளங்களை தூர்வாரி புரணமைத்து பருவ மழைக் காலங்களில் நீர் தேக்கம் அதிக்கப்படுத்தவும், பூங்கா அமைத்தும், குளங்களில் நீரூற்று அமைத்தும் அழகுபடுத்தப்படும். 

மேலும், மேற்குறிப்பிட்ட 8 குளங்களையும் இணைக்கும் வகையில் சாலை அமைத்து அதில் மிதிவண்டிகள் மூலமாக பொதுமக்கள் பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தற்போது சர்வேயர் மூலம் நிலஅளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இன்னும் 10 மாதத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளங்கள் மேம்படுத்தப்படுவத்தினால் தற்போது இந்த குளங்களில் அருகில் வசித்து வரும் பொதுமக்களை வெள்ளலூர் பகுதிகளுக்கு மாற்ற மாநகராட்சி சார்பில் குடிசை மாற்று வாரியம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக ரூபாய் 233 கோடி அடுக்குமாடி குடியிருப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...