என் வழி தனி வழி, என் அப்பா வழி தனி வழி - கோவையில் நடிகர் கவுதம் கார்த்திக் பேச்சு

கோவை சாந்தி திரையரங்கில் ‘இவன் தந்திரன்’ படக்குழுவின் நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் ‘இவன் தந்திரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரய்லர் திரையிடப்பட்டது. ‘இவன் தந்திரன்’ படத்தின் படக்குழுவினர்களுடன் ரசிகர்களும் பாடல்கள் மற்றும் ட்ரய்லரை கண்டு ரசித்தனர்.



‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாகவும், அர்ச்சனா ஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு வி.என்.மோகன், அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.



முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக்; "நான் தமிழ் படத்தில் இயக்குநர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். தமிழ் படத்தில் நான் நடிக்க எனது அப்பா முக்கிய காரணம். அப்பாவின் நடிப்பு வேற ட்ரெண்ட், நான் இன்னும் அவருக்கு சமமாக படங்களில் நடிக்கவில்லை. அவர் கூட நடிக்க நான் இன்னும் வளரனும்.

என்னோட ட்ராக்ல தான் நான் நடிகனும், அதுதான் அவரோட ஆசையும். தமிழ் படத்தில நான் இன்னும் பெரிய அளவில் சக்ஸஸ் பண்ணல, தமிழ் படத்தில் நடிக்கும் முன்பு மக்கள் மைண்ட்செட் எப்படி இருக்குனு புரிந்து நடிக்கனும், அது புரியாம தான் நான் நடித்த படம் பெரிய அளவில் ஓடவில்லை.

தற்போது ‘இவன் தந்திரன்’ படத்தில் தமிழ் மக்களுக்கு பிடித்த மாதிரி கதை கிடைத்துள்ளது. இந்த படம் முழுதும் சென்னையில் எடுக்கப்பட்டது. மழையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடி, செண்டிமெண்ட், கமர்சியல் எல்லாம் இருக்கு. இந்த படத்திற்கு பிறகு எனது அடுத்த படம் இந்திரஜித் வெளிவர உள்ளது. ‘இவன் தந்திரன்’ படம் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க சிறந்த படமாக இருக்கும்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...