பழங்குடி மற்றும் கிராம மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

ஈஷா அவுட்ரீச் ,சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் (ஜூன் 25) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஷா யோகா மையம் அருகில் உள்ள செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. 



         

இந்த முகாமில் 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் தானிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, முட்டத்துவயல், பட்டியார் கோவில் பதி, நரசிபுரம், கரும்பக்காட்டுபதி, இருட்டுப்பள்ளம், காந்திகாலனி போன்ற மலைவாழ் கிராம மக்கள் முகாமில் பங்கேற்று  பயனடைந்தனர்.



 

இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை, உணவு, தங்குமிடம் மற்றும் வாகன வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.  

மேலும், தேவைப்பட்டோருக்கு மிகக்குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது 

 

மேலும் விவரங்களுக்கு 9442641563/8903816461

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...