கோவையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது



கோவை பழைய சுங்கம் குளத்து வாய்க்கால் வீதி கருணாநதி நகர் பகுதியில் வசிப்பவர் முன்னா (60). இவரது மனைவி ரமீஷா பேகம் (54). இவர்களுக்கு 3 மகன்கள் மட்டும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் முன்னா தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரமீஷா பேகம் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், முன்னா அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முன்னா-வை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, முன்னா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

கடந்த 4 வருடமாக எனது மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து வந்தார். மேலும், எனது உடலை பலகீனமாக்க அவர் எனக்குத் தெரியாமலேயே சில மருந்துகளை கொடுத்து வந்தார். எனவே, அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என் மனைவி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு முன்னா கூறினார்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...