அரசியலுக்கு வந்தால் ரஜினி புஸ்வானம் ஆகிவிடுவார்: சீரியஸாய் கலாய்க்கும் சீமான்

தமிழக அரசியல் கால் உடைந்த நாற்காலியாய் ஆடிக்கொண்டிருக்க, ஜெ.வின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப பலரும் கங்கணம் கட்டியுள்ளனர்.

ஒவ்வொரு பட ரிலீசுக்கும் முன்பாக, 'நான் அரசியலுக்கு வருவேனா என்பதை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்' என்று கூறிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்த முறை ரசிகர்களோடு மீட்டிங், அரசியல் பேச்சு என சூட்டை கிளப்பிவிட்டார்.

இதை சில அரசியல் கட்சிகள் வரவேற்றாலும், பலர் மொழியை அடிப்படையாக கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆரம்பகட்டத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நேரடியாகவே சாடிவந்தார். தொலைக்காட்சி பேட்டிகளிலும், செய்தியாளர் சந்திப்பின் போதும், 'தமிழகத்தில் வாழ்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை உண்டு' என்ற கருத்துக்களை பதிவு செய்தார்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாட்டிற்கு காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் தான் தேவை. ரஜினி அரசியலுக்கு வந்தால் தீபாவளிக்கு வெடிக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல புஸ்வானம் ஆகிவிடுவார்.

இத்தனை நாளாய் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறார். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், 'வச்சி செஞ்சு அனுப்புவோம்' என்று கூறியுள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...