காவல்துறையினர் பொய்வழக்கு புனைவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சி- பரபரப்பு


கோவை மாவட்டம், காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலு. இவரது மனைவி இந்து. இவர்கள் அதேப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தனியாரிடம் கடன் பெற்றுள்ளனர். இதில், முழுமையாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், பிஜிலு-விற்கு கடனுதவி அளித்தவர் குண்டர்கள் மூலம் கடந்த மாதம் பிஜிலுவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிஜிலு மற்றும் அவரது மனைவி இந்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காவல்துறையினர் இந்த தமிபதியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த இந்த தம்பதியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, பிஜிலு, இந்து தம்பதியினர் கூறுகையில், நாங்கள் வீடுகட்ட கடன் அளித்த நபர் தற்போது குண்டர்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாலர் ராஜ்குமாரிடம் புகார் அளித்த நிலையில் அவர் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...