வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென்கைலாய பக்தி இயக்கம்

தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் "தென்கைலாய பக்தி இயக்கம்" பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.



அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தை தொடர்ச்சியாக இவ்வாண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்களும் இயற்கை இரசிகர்களும் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். ஒருபுறத்தில் தனிமனிதருக்கு இந்த பயணம் ஒரு மிகப்பெரிய அனுபவத்தை ஏற்படுத்தினாலும் ஏராளாமான மக்கள் இங்கு வந்து செல்வதால் இந்த இடம் பிளாஸ்டிக் குப்பைகளால் மாசுபடுகிறது. இது இங்குள்ள வன உயிர்களுக்கும் மண் வளத்திற்கும் பாதிப்பாக அமைகிறது.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென்கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை தங்கள் செயல் திட்டத்தில் ஒருமுக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்கைலாய பக்தி இயக்கம் சார்பில் வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணி கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தி வருகிறது. ஜூன் 25 ம் தேதியன்று நடைபெற்ற சுத்திகரிப்பு பணியில் சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், பெங்களூர், ஹைதெராபாத், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், கேஜி கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேருரை சேர்ந்த சிவபக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் அடிவார கோவில் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணி மேற்கொண்டனர்.



அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சுத்திகரிப்பு பணியில் சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது. நான்று ஞாயிற்றுக்கிழமைகள் நடந்த இந்த சுத்திகரிப்பு பணி மூலம் சுமார் 1200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...