முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இரு குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மறுவேலைவாய்ப்பு அடிப்படையில் குடிமைப்பணியில் வேலைவாய்ப்பு பெற்று குடிமைப் பணிக்கான ஓய்வூதியம் பெற்று உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவிரர்களின் கைம்பெண்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு இராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் குடிமைப்பணியில் பணியாற்றியமைக்கான குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டள்ளது.

2013 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு, குடிமைப்பணியில் மறுவேலைவாய்ப்பு பெற்று பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்பு ஓய்வூதியம் பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த குடிமைப்பணியில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் இவ்வரசாணையின்படி முன்னாள் படைவீரர்கள் பணியாற்றிய குடிமைப்பணி துறையினை அணுகி குடும்ப ஓய்வூதியம் குறித்தான கருத்துருவினை மாநில கணக்காயருக்கு பரிந்துரை செய்து பயனடையலாம்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், 0422- 2214107 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது நேரில் தொடர்புகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...