திருடன் என்று பழி சுமத்தியதால் தொழிலாளி தற்கொலை

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு ஸ்ரீகவுரி என்ற 5 வயது பெண்குழந்தை உள்ளது.

ராமச்சந்திரன் தங்க நகை தொழில் செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் துவங்கிய ராமச்சந்திரன் நகை செய்வதற்காக தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் நகை செய்து தரவில்லை என்றும், இதனால், நண்பர்கள் அவருக்கு திருடன் என்று பழி சுமத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் மும்பையில் சிறிது நாட்கள் தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்த அவர் மன உளைச்சல் அடைந்தார்.

இந்நிலையில் நேற்று விஷம் குடித்த ராமச்சந்திரன் செல்வபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...