ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணரும் வருமான வரித்துறை அதிகாரிகள்!

ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாக்கும் தரவு மறையாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் திணறியதால் பொதுமக்களின் குழப்பங்கள் தீர்க்க முடியாத நிலையே நிலவுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஜிஎஸ்டி பயிலரங்கம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேலம் மண்டல மத்திய கலால் வரித்துறை ஆணையர் கண்ணன், கோவை மண்டல துணை ஆணையர் கோவிந்தராஜ், பட்டய கணக்காளர் முரளி உள்ளிட்ட வருமானத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி குறித்து மக்களிடையே சாதகமான அம்சங்களை மட்டும் வெளியிடுமாறு வலியுறுத்தினர்.



அப்போது, ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை டேட்டா என்கிரிப்சன் எனப்படும் தரவு மறையாக்கம் செய்வது எப்படி என பத்திரிகையாளர் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் தொழில்நுட்ப கேள்விகளுக்கு தற்போதைக்கு தங்களிடம் பதில் இல்லை என தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி தகவல்களின் பாதுகாப்பு பணிகள் 49 சதவீதம் அரசிடமும் 51 சதவீதம் எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமும் உள்ளது. இதனால், தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 8 அம்ச தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ஜிஎஸ்டி வரியில் 20 சதவிகித பொருட்கள் மட்டுமே விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ள 80 சதவிகித பொருட்கள் விலை உயர வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என கணிக்க முடியாது. தற்போது விலை உயர்வு ஆண்டுக்கு 2.18 சதவிகிதம் அளவிற்கு உள்ளது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுவதால் இந்த விலை உயர்வு 3.5 சதவிகிதம் மட்டுமே உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தற்போது இந்திய அரசு 64 பிட் என்கிரிப்சனும், வாட்ஸ் ஆப் 128 பிட் என்கிரிப்சனும் பாதுகாப்பு அம்சங்களாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...