ராஜவாய்க்காலில் மூன்றுவார கால தூய்மை பணியினை வீணடித்த கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மூன்றுவார கால தூய்மை பணி வீணா ? கோவை மாவட்ட நிர்வாகம் மெத்தனம்

கோவை நொய்யல் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளன. ஆறு, குளங்கள், பாசன வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரிடையாக பாசன வசதி பெறுகிறது.

1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் பாயும். அப்போது குளங்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ளலூர் குளத்திற்கு பாயும் 8 கி.மீ நீளம் கொண்ட ராஜ வாய்க்கால், குனியமுத்தூர் குளத்திற்கான ராஜ வாய்க்கால், பேரூர் ராஜ வாய்க்கால் போன்றவை பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதில் ஆக்கிரமிப்பில் இருந்த நொய்யல் ராஜ வாய்க்கால்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



வெள்ளலூர் ராஜ வாய்க்கால் அடைப்பினாலும், ஆக்கிரமிப்பினாலும் போதுமான அளவு நீர் பாயவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் இந்த குளம் 45 சதவிகிதம் மட்டுமே நிரம்பியது. கடந்த 2009-ம் ஆண்டில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து குளங்களும் நிரம்பின. ஆனால் வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாயவில்லை. 

இந்த குளத்திற்கு சுண்ணாம்பு கால்வாயிலிருந்து செல்லும் வாய்க்கால் மூலமாக நீர் செல்லவேண்டியிருக்கிறது. ராஜ வாய்க்கால் கரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் தற்போது உள்ளது. 



கேவையில் பல்வேறு குளங்களை சிரமைத்து வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள், மண் திட்டுக்கள், பிளாஸ்டிக் மற்றும் புதர்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பருவமழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்கால் பகுதியினை சுத்தம் செய்வதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.



குறிப்பாக, இந்த வாய்க்கால் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 1800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதனை அகற்றி மாற்று இடத்தில் அப்பகுதி மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்று இடத்தில் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது வரை ராஜவாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றினால் மட்டுமே தற்போதைய பருவமழையில் மழை நீர் சேகரமாகும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...