கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலைமறியல்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்குவதில் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி இன்று பெற்றோர்கள், மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்விகளானது மாறுபட்டு மருத்துவ படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கிவிட்டு மீதமுள்ளவர்களை நிர்வாகத்தினர் அலைக்கழித்துள்ளனர். 



இதனைத்தொடர்ந்து, இன்று மருத்துவக் கல்லூரியில் சிலருக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு பிறரை நாளை வரும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், மாணவர்களும் அவினாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.



முன்னதாக, இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில், ஏற்கனவே மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்கள் பெரிதும் மனவுளைச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விண்ணப்பங்கள் வழங்குவதில் முறையாக செயல்படுவதில்லை. இவ்வாறாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...