ஜி.எஸ்.டி. வரியால் தமிழக தியேட்டர்கள் ஸ்ட்ரைக்?

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 30 சதவிதத்தை வரியாக தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வரிவிதிப்பு கொள்கையால், தியேட்டர் உரிமையாளர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிக்கொள்கையின் படி தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தில் இருந்து 18 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். டிக்கெட்டுகளின் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் 28 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழக வரி உட்பட 58 சதவிகித வரியை தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டரில் படம் பார்க்க செல்வோர் சுமார் 170 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், இன்று நடந்த தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் வரும் 3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக கூறடுகிறது. இந்த வேலை நிறுத்த போரட்டத்தால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரைபடம் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...