புலியகுளம் பகுதியில் பயிற்சி வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அவளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கூவலியப்பன். இவரது மகன் அமரேஷ் (27) இவர் கோவை சட்ட கல்லூரியில் சட்டக்கல்வி படித்து முடித்தார். மேலும், புலியகுளம் பகுதியில் தங்கி பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்த் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி அமரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அமரேஷ் நேற்று பலியானார். 

இது குறித்து அமரேஷின் சகோதரர் நாரயணசாமி ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...