திரையரங்குகள் முடக்கம்! கோரிக்கைகள் என்ன? திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சிறப்பு பேட்டி!

நாடுமுழுவதும் ஜிஎஸ்டி வரிக்கொள்கை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்பினரும் இந்த புதிய வரி விதிப்பு கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிகமாக வரிகட்ட வேண்டிய சூழல் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் இழப்பை சந்திக்கநேரிடும் என்று கூறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திரையங்கு உரிமையாளர்களிடம் இருந்து தமிழக அரசு வசூலிக்கும் 30 சதவித வரியை நீக்குவது உள்ளிட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இது குறித்து மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொரு டிக்கெட் விலையில் இருந்தும் தமிழக அரசுக்கு 30 சதவிதத்தை  (எண்டர்- டெயின்மென்ட்) வரியாக கட்டி வருகிறோம். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரிக்கொள்கையின் படி 28 சதவிகித வரியை செலுத்த வேண்டும். இதனால், மொத்தம் 58 சதவிகிதம் வரை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திரையரங்கு தொழில் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதில், முதலாவது தீர்மானமாக, 58 சதவிகித வரி நீக்க வேண்டும், தமிழக அரசு வசூலிக்கும் 30 சதவித வரியை நீக்க வேண்டும் என தமிக அரசை கேட்டுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஏனென்றால் 58 சதவித வரி செலுத்தி திரையரங்கு தொழில் செய்ய முடியாது. அவ்வாறு, 58 சதவித வரி செலுத்த நேரிட்டால், 150 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுக்கு 90 ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இப்படி வரி வித்திதால் மக்களும் தியேட்டர்களை புறக்கணிப்பார்கள். சினிமா தொழிலும் பாதிப்புக்குள்ளாகிவிடும். 

இரண்டாவது தீர்மானமாக, டிக்கெட் விலை தற்போது 120 ரூபாய் வசூலிக்கபட்டு வருகிறது. இந்த அதிகபட்ச விலையை 150-ஆக உயர்த்த வேண்டும்.அப்படி உயர்த்தும் பட்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அந்த பணத்தில் இருந்தே ஜிஎஸ்டி வரியை செலுத்துவார்கள். 

கணினிமயமாக்குதல்:

அனைத்து திரையரங்குகளையும் கணினிமையமாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், தியேட்டர்களுக்கு வரும் வாடிக்கையளர்கள் எண்ணிக்கையை தயாரிப்பாளர்கள் உடனடியாக பார்க்க முடியும். இப்படி கணினிமயமாக்குவதன் மூலம் ஜிஎஸ்டி வரியை 100 சதவிதம் நேர்மையாக செலுத்துவார்கள். அப்படி, யாரேனும், வரி ஏய்ப்பு செய்வது தெரிந்தால், அவர்களுக்கு ஒரு முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். மீண்டும் தவறு செய்தால், அடுத்த முறையில் இருந்து அவர்களுக்கு எந்த புதிய திரைப்படங்களும் வழங்கப்படாது. இது திரையரங்க உரிமையாளர்களும், திரைப்பட விநியோகிஸ்தர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. 

இழப்பு:

தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பாதிக்கபடுவார்கள். இந்த இழப்பை ஈடு செய்ய, வேலை நிறுத்த போராட்டம் முடிந்தவுடன் தற்போது திரையிடப்பட்டிருக்கும் அதே திரைப்படத்தை குறைந்தது 7 நாட்களுக்கு திரையிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கு, தமிழக அரசு வசூலிக்கும் 30 சதவித வரியை நீக்குவதே திரையரங்கு உரிமையாளர்களின் மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...