சௌரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

சௌரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சௌரிபாளையம் பகுதியில் உள்ள கருணாநிதி நகர், தேர்வீதி, கல்லறைவீதி,  ஜி.வி. ரெசிடென்சி என ஒரே பகுதியில் அருகருகே 4 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அகற்றக்கோரி இன்று கருப்பு கொடிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 மணி நேரமும் அக்கடைகளில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய போது டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் உத்திரவாதம் அளித்த நிலையிலும், இன்றுவரை டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...