கோவை மாவட்டம் பொள்ளாச்சி -அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அணையாக உள்ளது. இந்த அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும் வழங்கப்படுகிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்தாண்டு பருவமழை கரிவர பொழியாத நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் வறண்டன. 

இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் ஆழியாறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.

அணைகளில் நீர்மட்டம் விபரம்:-

சோலையார் அணையின் நீர்மட்டம் 87.77/160 அடி. தற்போது, 710.30 கன அடி நீர்வரத்து உள்ளது. 359.26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணை நிர் பிடிப்பு பகுதியில் 9 மி.மீ மழை அளவு உள்ளது.

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 9.10/72 அடி ஆகும். தற்போது, 144 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 3 கன அடி நிர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 13 மி.மீ மழை அளவு உள்ளது. 

69.70/120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது, 37 கன அடி நீர்வரத்து உள்ளது. இங்கிருந்து 151 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 14.52/60 அடி ஆகும். இங்கிருந்து தற்போது, 26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 44.29/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 218 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டம், வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவக்கமாக 19 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது. வால்பாறைக்கு உட்பட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை விபரம் பின்வருமாறு:-

அப்பர் நீராறு - 8 மில்லி மீட்டர், லோயர் நீராறு - 20 மில்லி மீட்டர், மணக்கடவு - 2 மில்லி மீட்டர், தூணக்கடவு - 5 மில்லி மீட்டர், பெருவாரிபள்ளம் - 7 மில்லி மீட்டர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...