கோத்தகிரி அருகே டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தவிட்டுமேடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தவிட்டுமேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்ட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தண்ணீர், சாலை, கழிப்பிட வசதி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக திறந்த வெளியில் மலம் கழித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது குறித்து அரசுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது நாள் வரையில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில், தவிட்டுமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் திடீரென டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் அருகாமையில் பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்ளது. இதனால், டாஸ்மாக் மதுபானக் கடையினை உடனடியாக அகற்றி, அந்த கடையின் கட்டிடத்தை கழிப்பறையாக மாற்றி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...