தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விறப்பனை படு ஜோர்: முறையான நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகை பொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அவ்வப்போது, இவ்வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வகை போதை பொருட்கள் முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் என்னுடன் வந்தால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காட்டுவேன்' என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...