கோவையில் 450 கிலோ எடையிலான எரிவாயு "ஜம்போ சிலிண்டர்" அறிமுகம்

பெரு நிறுவனங்கள் மற்றும் பெரிய உணவகங்கள் பயன்பெறும் வகையில் 450 கிலோ எடையிலான எரிவாயு சிலிண்டரை "ஜம்போ சிலிண்டர்" என்ற பெயரில் இந்தியன் ஆயில் நிறுவனம் கோவையில் இன்று அறிமுகம் செய்தது.



பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 450 கிலோ எடையில் ஜம்போ என்ற பெயரில் பெரிய அளவிலான எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிலிண்டர் அறிமுக விழா கோவையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. சிலிண்டரை அறிமுகம் செய்து வைத்த பின்னர் இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் சித்தார்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்டேன் நிறுவனம் முதல் முறையாக அதிக எடை கொண்ட இந்த சிலிண்டரை அறிமுகம் செய்கிறது. இதன் விலை 24 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை பெற ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 64 சதுர அடி பரப்பளவில் இந்த சிலிண்டரை வைத்துக்கொள்ளலாம்.



வாடிக்கையாளர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சிலிண்டர்களை விட இந்த சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. எரிவாயு கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் இதில் இருக்காது. எளிதாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஜம்போ சிலிண்டர் இன்று முதல் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்திசெய்யும். இது வரை இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த 44 லட்சத்து 43 ஆயிரத்து 667 வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மானியம் தேவையில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். நெல்லையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன சேமிப்பு கிடங்கு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...