நோட்டிஸ் இன்றி கட்டிடத்தை அகற்ற வந்ததாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த திருச்சபையினர்


கோவை சித்ரா பகுதியில் தென்னிந்திய திருச்சபை நடத்தும் பெண்கள் மேம்பாட்டு வாழ்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த கல்லூரி அமைந்துள்ள இடம் தொழில் வணிகத்துறைக்கு சொந்தமானது.



இந்த நிலையில், சாலை மேம்பாட்டுக்காக இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று கூறி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தொழில் வணிகத்துறையினர் மற்றும் போலீசார் திரண்டனர். அப்போது, முறையான நோட்டீஸ் வழங்காமல் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி திருச்சபையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 2 நாட்கள் அவகாசம் தருவதாக அதிகாரிகள் கூறிச்சென்றனர்.



இதனிடையே, கட்டிடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தும் நேரத்தில் எங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று திருச்சபையினர் கோரிக்கை விடுத்தனர்.



இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருச்சபையினர் இந்த இடத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதாக அரசிடமிருந்து நிலத்தை பெற்றுள்ளனர். ஆனால், தொழில் நிறுவனம் நடத்தாமல் பூட்டி இருந்ததால் தொழில் வணிகத்துறையினர் அந்த இடத்தை கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதன் பேரில் தான் இன்று நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை கையகப்படுத்த சென்றோம். குறிப்பிட்ட இடத்தில் ரவுண்டான அமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது' என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...