நீலகிரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் (பொ) வழங்கினார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5,76,745 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 77 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியனிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.



இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு தலா ரூ.7907 வீதம் 35 நபர்களுக்கு ரூ.2,76,745  மதிப்பிலான மின்மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பந்தலூர் வட்டம் மூணாடு கிராமத்தை சேர்ந்த சிபியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் எம்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப்பாட்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...