கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பயிற்சி

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அனைத்து சாலையோர வியாபாரிகளையும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுவரை, 4,000 பேருக்கு அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. 



இதற்கென, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் சாலையோர கமிட்டியில், நகர் நல அலுவலர், போக்குவரத்து போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இக்கமிட்டியினர், மாநகராட்சி பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை சாலையோர வியாபாரிகளுக்காக தேர்வு செய்யப்படும். அங்கு, வியாபாரிகளை வகைப்படுத்தி இடம் ஒதுக்கப்படும்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிகையில், சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு உதவிகள் செய்கின்றன. அவற்றை வியாபாரிகள் அறியாமல் உள்ளனர். அதனால், சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னோடி வங்கி மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், திட்ட அலுவலர், உணவு கலப்பட தடுப்பு பிரிவினர், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்பர். அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் அழைக்கப்படுவர். மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி, மானியம், உணவு பண்டங்கள் தயாரிப்பது, விற்பதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை, குப்பையை கொட்ட வேண்டிய இடங்கள் உள்ளிட்டவற்றை, அலுவலர்கள் விளக்குவர். திட்டம் தொடர்பான தொகுப்புரை புத்தகம் தயாராகி வருகிறது. விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.' இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...