'கும்' இருட்டில் சிக்கித்தவிக்கும் பந்தைய சாலை சிறுவர் பூங்கா : நடவடிக்கையை எதிர்நோக்கும் குழந்தைகள்

கோவை மாநகரில் சூழல் பிரச்சனைகளே இல்லாத ஒரு ரம்யமான இடம் ரேஸ்கோர்ஸ். அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கியப்புள்ளிகள் வாழும் பகுதி இது. இப்பகுதியில் அமைந்துள்ள மண்டல நீதித்துறை பயிலகம் அருகே சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது.



ஊஞ்சல், சறுக்கி விளையாட்டு, சீ-சா போன்ற குழந்தைகளின் விருப்ப விளையாட்டுகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அருகில் இருக்கும் அரசு குடியிருப்பு மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், சிறுவர்கள் மாலை நேரத்தில் இந்த பூங்காவில் பொழுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.

கும் இருட்டு

பொதுவாக மாலை நேரத்தில் குழந்தைகள் அதிக அளவில் இந்த பூங்காவிற்கு வருகின்றனர். இந்த சூழலில் பூங்காவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மின்விளக்கு எரியாமல் இருள் படர்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் பூங்காவிற்குள் ஒரு நபர் இருந்தால் கூட அது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத அளவிற்கு கும் இருட்டு.



இருந்த போதும், பெற்றோர்களுடன் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் அங்கு விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இவ்வாறு, இருள் படர்ந்த பூங்கா குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.

மேலும், மதிய வேளையில் பூங்கா-விற்குள் யாரும் நுழையக்கூடாது என்பதற்காக பூங்காவை சுற்றிலும் வேலியமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த வேலியும் பழுதடைந்துள்ளது.

கோவையின் மத்திய பகுதியில், அதுவும் அரசு அதிகாரிகளின் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் இது போன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...