கோவையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் நடமாடும் புத்தகக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று தொடங்கிவைத்தார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் மைய நூலகம் - 1, கிளை நூலகம் - 90, ஊர்புற நூலகம் - 100, பகுதி நேர நூலகம் - 53, நடமாடும் நூலகம் - 3 என மொத்தம் 247 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணாக்கர்கள், மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களின் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் நடமாடும் புத்தகக் கண்காட்சியானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தொடங்கி  நெ.10.முத்தூர், கோவிந்தாபுரம், வடக்கு நல்லி கவுண்டன்பாளையம், ஆதியூர், சென்னியூர், நாராயண செட்டிபாளையம், கூ+லக்கல், கொல்லம்பாளையம், கொண்டம்பட்டி, கோதவாடி, எம்.ஏ.கவுண்டன்பாளையம், கல்லாங்கரை, தேவனாம்பாளையம், கோவில்பாளையம், சேரன்நகர், ஜமீன் காளியாபுரம், பட்டணம், நாகமநாயக்கன்பாளையம், பீடம்பள்ளி, இ.பி.காலனி, அப்பநாயக்கனபட்டி புதூர், கலங்கல், திருமலையாம்பாளையம், தெப்பக்குளத்துப்பாறை, குமிட்டிபதி, மாஸ்திக்கவுண்டன்பதி, குட்டிக்கவுண்டன்பதி, நாச்சிபாளைம், அரிசிபாளையம், சீராபாளையம், புத்தூர், மத்வராயபுரம், சந்தேகவுண்டன்பாளையம், குப்பனூர், பச்சாப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இந்த புத்தக கண்காட்சி வாகனம் செல்கிறது.



கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அந்தந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் தலா ஒரு நாள் இப்புத்தகக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொவித்தார்.

இந்நிகழச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தேன்மொழி, மாவட்ட நூலக அலுவலர் ந.மணிகண்டன், முதல் நிலை நூலகர் பே.இராஜேந்திரன் நூலக ஆய்வாளர் சக்திவேல் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...