ஜிஎஸ்டி வரியால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்- நீலகிரியில் தமாகா தலைவர் பேட்டி


நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. குன்னூர்  நகர தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வட்டாரத்தில் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. மர்மமான முறையிலும் தற்கொலைகள் நடைபெறுவதால் இதனை சிபிஜ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியினால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு, ஜவுளி, ஓட்டல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனைத்து மக்களிடையே கருத்து கேட்க வேண்டும்' என தெரிவித்தார்.

இதில் குன்னூர் நகர தலைவர் ஆனந்த குமார், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...